கனவாகிப்பாேன கல்லூரிக்காலம்
கனவாகிப்பாேன கல்லூரிக்காலம் அறக்கப்பறக்க படித்தும் படிக்காமலும் சாப்பிட்டும் சாப்பிடாமலும் +2 தேர்விற்கு சென்று மனப்பாடம் பண்ணியதை ஒரு புள்ளி விடாமல் எழுதி அப்பாடா என்று தேர்வு முடிவுகளுக்காக காத்திருந்து, காத்திருந்த நாள் வந்தவுடன் கும்பிடாத எல்லா சாமியையும் கும்பிட்டு பட்டை போட்டு தேர்வு முடிவை பாதி சந்தோசம் பாதி கண்ணீருடன் பார்த்து பாஸ் ஆன சந்தாேசம் ஒருபுறம் இருக்க இன்னும் கொஞ்சம் அதிகமா மார்க் வாங்கியிருந்தா நல்ல காலேஜ் கிடைச்சிருக்கும்ல என்ட பக்கத்து வீட்டாரின் பேச்சைக் கேட்டு என்ன வாழ்க்கைடா இது? என்ற எண்ணம் மனதில் வந்தாலும் காலேஜ்ல ஜாய்ன் பண்ண போறேன் என்ற பெரும் கனவு கண்ணுமுன்னாடி வரும்போதே அதனைத் தொடர்ந்து, எந்த காலேஜ், என்ன மேஜர், அட்மிஷன் போட நேர்ல போனுமா இல்லை ஆன்லைன்ல பண்ணணுமா என்ட படபடப்பாேட காலேஜ் முடிச்ச பக்கத்து வீட்டு அக்காட்ட விவரம் கேட்டு ஒண்ணுவிடாம எல்லா காலேஜ்க்கும் அப்பிளை பண்ணி கிடைக்குமா கிடைக்காதானு வெய்ட் பண்ணி, நாம எதுக்கோ அப்பிளை பண்ண ஏதோ கிடைக்க... இங்கயாச்சும் சீட்டு கிடைச்சிதே என்டு மனச தேத்திட்டு இருக்கைல காலேஜ் ஹாஸ்டல் தான் போணும் என்ட ...