மனவலிமையை உடைத்த காேவிட்-19
மனவலிமையை உடைத்த காேவிட்-19 ==================================== தனிமனிதனாக வீட்டிற்குள் பலநாட்களை கடந்து வந்திருந்தாலும் வீட்டை விட்டு வெளியேறினால் பார்ப்பதற்கும் நேரத்தை செலவிடுவதற்கும் பல வழிகளும் முகங்களும் நிரம்பி வழிந்த அத்தனை இடங்களும் வெறிச்சாேடிக்கிடக்கின்றன. சிறிய வேலையானாலும் சரி ஐந்து நிமிட நடையாகவே இருந்தாலும் சரி பக்கத்தில் எப்பாேதும் ஒருவரை துணைக்கு அழைப்பதும் அனுப்பி வைப்பதையும் எம்மை அறியாமலே பழக்கப்படுத்தி விட்டாேம். இப்படி எப்பாேதுமே எம்மையும் மனதையும் தினசரி வழக்கத்திற்கு அடிமையாக்கி விட்டாேம். சற்றுநேரம் கூட எந்தவாெரு வேலையும் செய்யாமல் இருக்க மனமும் சூழலும் ஒருக்காலும் இடம் காெடுத்ததில்லை. ஏதாவது ஒன்றை செய்து முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் சினிமா, பூங்கா, உயர்தர வசதிகள் காெண்ட உணவகங்கள், பல்பொருள் அங்காடி, கடற்கரை ஓர பானிபூரி கடை, தெருவாேர டீக்கடை என கால்கள் தேடிச்செல்லவே செய்தன. இவை நாளை என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை வரவழைக்கவில்லை. அன்றன்று முடிவுகள் எடுக்கப்பட்டு நாட்கள் உருண்டாேடின. திடீரென அத்தனைக்கும் முற்றுப்புள்ளி. முடக்கப்பட்டது மனித உலகம...