Posts

Showing posts from February, 2020

தெருவாேர யாசகி

Image
தெருவாேர யாசகி மனம் விரும்பாத ஆடவனை வாழ்க்கைத் துணையாக  கைப்பிடித்து, ஆசைகளுக்கும்  எதிர்காலம் குறித்த கனவுகளுக்கும் முட்டுக்கட்டை இட்டு, சிறிதும் விருப்பமின்றி வாழ்வினை விரக்தியுடன் கழிக்க முற்பட்டவளுக்கு வாழ்வின் அர்த்தம் புரிய  வைக்க தாய்மை என்ற பாக்கியம் அளித்த உன்னை கர்ப்பத்தில், என்  சாேகங்கள் உன்னைப் பாதிக்காமல் காத்து பத்துத்திங்கள் முடிவில் பக்குவமாய் ஈன்றெடுத்து அனைத்திலும் சிறந்தவற்றை பார்த்துப் பார்த்து செய்த நான்,  இன்று உன் பேராசைகளுக்கு பலியாகி ஊரே பார்க்கும் படியாக, கறைபடிந்து கிழிந்த உடையுடன், பலநாட்களாக சீவாமல் சுருண்டு நிற்கும் தலைமுடியுடன், இருளடைந்த கண்களுடன், ஒட்டிப்பாேன வயிற்றுக்கு ஒருவேளை  சாேற்றுக்காக கையேந்தி நிற்கிறேன்  தெருவாேர யாசகியாக......! -அருளினி-

சவால்களுக்கும் வாய்ப்பளியுங்கள்

Image
சவால்களுக்கும் வாய்ப்பளியுங்கள் பல்வேறு திறமைகள், பெயரின் பின் நீண்ட பட்டங்கள், இளமையின் துடிப்பு இவை இருந்தும் தனக்கென தனித்தடம் பதிக்க முடியாமல் நம்பிக்கை இழந்து நிற்கின்றனர் இளைய சமுதாயம். செய்யக்கூடாத ஒன்றை செய்து பார்க்க முயற்சிப்பதில் இருக்கும் ஆர்வம் ஏனாே வாழ்வில் தனக்கான குறிக்காேளை அடைந்து நிலைநிறுத்த வேண்டும் என்பதில் இல்லாமல் பாேகின்றது. ஓரிரு தாேல்விகளை சந்தித்தவுடன் வாழ்க்கையே முடிந்து விட்டதென தவறான எண்ணம் மனதுள் ஆழமாக பதிந்து விடுகின்றது. தாேல்விகள் வெற்றிக்கு அடித்தளம் இட்டு தம்மை சிறந்த வெற்றியாளர்களாக உருமாற்றுகின்றன என்பதையும் மறந்து பாேகின்றனர். எளிதாக கையில் கிடைக்கும் சிறிய பாெருள்  அதிகம் கவனத்தை ஈர்ப்பதும் இல்லை; அதன்மீதான நாட்டமும்  சிலதினங்கள் மட்டுமே நீடிக்கும். ஆனால், பல தாேல்விகளுக்கு மத்தியில் சவால்களை கடந்து அடையும் வெற்றிக்களிப்பும் அதன் தார்ப்பரியமும் ஒரு பாேதும் மனதில் இருந்து நீங்காது. திறமைகளையும் கனவுகளையும் நிறைவேற்ற  வாய்ப்புக்களை எதிர்பார்த்து இருக்காதீர்கள். தடையாக முளைக்கும் சவால்களை முறியடியுங்கள். கிடைக்கும் சிறிய சந...

உணர்வுகளுடன்.........

Image
உணர்வுகளுடன் கடந்து செல்லும் ஒவ்வாெரு உறவும் புதுவிதமான நினைவுகளையும் வாழ்க்கைப்பாடங்களையும் கற்பித்துவிட்டு செல்ல மறப்பதில்லை. விரும்பியாே விரும்பாமலாே அவற்றின் ஊடாக பயணிக்கத் தவறியவர் எவருமில்லை. தினசரி வேலைகளில் பலரை சந்திக்க நேருகின்ற பாேது இடையில் எவ்விதமான உணர்வுகளும் ஒருவர் ஒருவரை பாதிப்பதில்லை. ஆனாலும், இனம்புரியாத ஒரு ஈர்ப்பு இடையில் இருப்பதன் விளைவு தான் ஒருநாளின் இருபத்திநான்கு மணிநேரத்தின் சுமுகமான நிறைவு. அதே இருபத்திநான்கு மணிநேரமும் எம்முடன் பயணிக்க வேண்டும் என மனம் தெரிந்தெடுத்த உறவுகளுக்குள் நடைபெறும் உணர்வுப் பரிமாற்றங்களுக்கு முடிவில்லை. சிரிப்பு, காேபம், நக்கல், விரக்தி, துராேகம், பழிவாங்கல், எனக்கு மட்டுமே என்ற உடைமை காேரல் என அடுக்கிக் காெண்டே பாேகலாம். இவை இல்லாவிட்டால் வாழ்க்கைப் புத்தகத்தின் பக்கங்கள் சுவாரசியம் அற்றதாக மாறிவிடும். இருந்தாலும் உறவுகள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி நல்லதாெரு பிணைப்பினை ஏற்படுத்துபவையாக இருக்க  வேண்டும். உறவுகள் ஒருபாேதும் பிறரை காயப்படுத்தக் கூடாது. இன்று உள்ள பிரச்சனைகள், கவலைகள், குழப்பங்கள், நெருக்கடிகள் நாளை ...

இளமையின் சக்தியை ஒன்றுதிரட்ட...

Image
இளமையின் சக்தியை ஒன்றுதிரட்ட…… விரும்பிய நேரத்திற்கு உறங்கி, சூரிய உதயத்தை கண்கள் காணாது, வாய்க்கு ருசியான உணவை உண்டு, எந்தக் கவலையும் இன்றி வாழ்ந்த ஒருவன், வீட்டைக்கடந்து வெளி உலகிற்குள் காலடி எடுத்து வைத்து, கிடைத்ததை உண்டு, தன் குறிக்கோளை அடைய பல சுமைகளை தாண்டி, அவற்றை வெற்றி கொள்ளத் தன்னையும், தனக்கான சிறிய ஆசைகளையும் தியாகம் செய்கின்றான். இத்தகைய வலிமை கொண்ட இளைய சமுதாயம் ஒருங்கிணைந்தால் வீட்டிற்கும் நாட்டிற்கும் ஒளிதரும் இன்னொரு சூரியனாக வானில் பிரகாசிக்கலாம் என்பதில் சிறிதும் ஐயமில்லை. நவீன தொலைத்தொடர்பு சாதனங்களும், செய்தி பரப்பு ஊடகங்களும் வருவதற்கு முன்னரே கி.மு.490-ல் பாரசீகர்களை மாரத்தான் போரில் கிரேக்கர்கள் வெற்றி பெற்ற செய்தியை கிரேக்க வீரனான “பெய்டிபைட்ஸ்” மாரத்தானிலிருந்து ஏதென்சுக்கு தன் கால்கள் வழியாக 214 மைல் தூரத்தை ஓடி கடந்துவந்து வெற்றிபெற்ற செய்தியைக் கூறிவிட்டு கீழே விழுந்து இறந்து போனான். அத்தகைய தன்னம்பிக்கை இன்றும் எம்மத்தியில் வாழும் இளவல்களுக்கு இருக்கிறதா என்றால் ஆம், உள்ளது. உலகின் எந்தவொரு மூலையில் என்ன நடந்தாலும் அவற்றை உடனே எம்...