தனிநபர் வாகனப்பயன்பாடும் சுற்றுச் சூழல் மாசுபாடும்
தனிநபர் வாகனப்பயன்பாடும் சுற்றுச் சூழல் மாசுபாடும் நம் வாழ்வில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நாம் பல்வேறு காரணங்களுக்காக பயணிக்கிறோம்.அவ்வாறு பயணிக்கும் போது எமக்குரித்துடைய சொந்த வாகனங்களையே நம்பி இருக்கிறோம்.சுதந்திரமாக எமது பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முயற்சித்ததன் விளைவாகவே இன்று பொது போக்குவரத்து சாதனங்கள் குறைவடைந்து தனிநபர் வாகனப்பயன்பாடு அதிகரித்துள்ளன. தனிநபர் வாகனப்பயன்பாடு இன்று மிகவும் அதிகரித்த ஒன்றாக காணப்படுகின்றது.அவசியத்தேவையைப் பூர்த்தி செய்த காலம் மலையேறி ஆடம்பரத் தேவையை பூர்த்தி செய்யும் சொகுசு வாகனங்களாகவும் சமூகத்தில் தமது உயர்ந்த நிலையை காட்டவும் பயன்படுத்தும் ஒரு வெளி அடையாளப் பொருளாகவும் தனிநபர் வாகனப் பாவனை உருப்பெற்று விட்டது. பத்து நிமிடம் நடந்து சென்று பொருட்கள் வாங்கும் கடைத்தெரு , காய்கறிச்சந்தை எனத்தொடங்கி பாடசாலை , கோவில் , வேலைத்தளம் , நண்பர் , உறவினர் வீடு என அனைத்திற்கும் வாகனங்களைப் பயன்படுத்துபவர்களாக நாம் இன்று மாறிவிட்டோம். இவ்வாகனங்கள் எமது தேவையை இலகுவாக்குகின்றன என்று கூறினால...