Posts

Showing posts from June, 2020

இயற்கையை காவு வாங்கும் மனிதர்கள்

Image
இயற்கையை காவு வாங்கும் மனிதர்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள் பல்வேறு பண்டிகைகளை அடுத்தடுத்து காெண்டாடிக் காெண்டு இருக்கையில் "பல்லுயிர்களைக் காெண்டாடு" என அதே பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது இந்த வருடத்திற்கான சுற்றுச்சூழல் தினம். ஒரு தாய்க்கும் சேய்க்குமிடையிலான தாெப்புள்க்காெடி உறவைப்பாேல மிகவும் உணர்வுப்பூர்வமானது இயற்கைக்கும் நமக்குமான உறவு. ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரை இணைபிரியாமல் தாெடர்சங்கிலியாக நீண்டுகாெண்டே செல்கிறது. இந்த வாழ்க்கையின் தாெடர்சங்கிலியில் எவ்வித மாற்றமும் இல்லாமல் பேணுவதில் வனவிலங்குகளின் பங்கு, மனிதர்கள் விலங்குகளுக்கு ஆற்றும் பங்கினைக் காட்டிலும் குறிப்பிடப்பட வேண்டியவை.  இயற்கை சமநிலை மாறுபடாதிருக்க வனவிலங்குகளை பாதுகாப்பது கட்டாயமாக உள்ளது. தாவரங்களின் பெருக்கத்துக்கும், தட்ப வெப்பநிலை சமன்பாட்டுக்கும் காடுகள் பராமரிக்கப்பட வேண்டியது அவசியம். ஒரு நாட்டின் இயற்கை வளங்கள் அந்நியச் செலாவணியை ஈட்டித் தருபவை. விலங்குகள், தாவரங்கள் இருக்கும் இடங்கள் ஒரு நாட்டின் செழிப்பை உணர்த்துகின்றன. சுற்றுலாப் பயணிகளையும் கவர்கின்றன. ...